தெலுங்கானா

ஹைதராபாத்: கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டிவந்த நிலையில், பரப்புரை ஓய்ந்ததும் கல்லூரி மாணவர்களுடன் காற்பந்து விளையாடி மகிழ்ந்தார், இந்தியாவின் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி.
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் பேகம்பேட் வட்டாரத்தில் தன் பதின்ம வயது மகளுடன் வசிக்கிறார் அமிதா மஹ்னோட் எனும் மாது.
செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஜடலா மாளவிகாவுக்கு சிறுவயதில் இருந்தே காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்பது கனவு. அவரைக் காவல்துறை அதிகாரியாகப் பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.